காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சிறு குற்றப் பிரிவுக்கான காரியாலயம்



பழுலுல்லாஹ் பர்ஹான்-

லங்கைப் பொலிஸ் திணைக்களத்தினால் களுவாஞ்சிக்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி. ஜெயந்த ரத்நாயக்காவின் ஆலோசனையின் பேரில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்னவின் முயற்ச்சியின் பயனாக பொது மக்களின் நன்மை கருதி மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பல்வேறுபட்ட முறைப்பாடுகளை விசாரணை செய்ய புதிதாக அமைக்கப்பட்ட சிறு குற்றப் பிரிவுக்கான காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வு கடந்த 15 - சனிக்கிழமை காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறு குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி ரணசிங்க தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில்; அமைக்கப்பட்ட சிறு குற்றப் பிரிவுக்கான புதிய காரியாலயம் களுவாஞ்சிக்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி. ஜெயந்த ரத்நாயக்காவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் களுவாஞ்சிக்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி. ஜெயந்த ரத்நாயக்கா, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன, காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறு குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி ரணசிங்க உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :