சாய்ந்தமருதில் மாணவர்களின் கற்கை நெறிகள் சம்பந்தமாகஆராயும் கூட்டம்



ஹாசிப் யாஸீன்-சாய்ந்தமருது இளைஞர் வள நிலையத்தின் அபிவிருத்தி மற்றும் மாணவர்களின் கற்கை நெறிகள் சம்பந்தமாகஆராயும் கூட்டம் சாய்ந்தமருது இளைஞர் வள நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (16) நடைபெற்றது.

சாய்ந்தமருது இளைஞர் வள நிலையத்தின் பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஏ.லத்தீப் தலைமையில் நடைபெற்றஇக்கூட்டத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் எஸ்.எம். அலி ஜின்னா மற்றும் வள நிலையவிரிவுரையாளர்கள், இளைஞர், யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது தற்போதைய தொழில்நுட்ப சந்தைக்கேற்ற மாதிரியான கற்கை நெறிகளை வள நிலையத்தில் அறிமுகம்செய்தல், மாணவர்களின் நலன்கள் மற்றும் வள நிலையத்தின் அபிவிருத்தி பற்றி விரிவாக ஆராயப்பட்டது.

இதற்கான தீர்வினை இளைஞர் விவகார, திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுடன் பேசி உடன்பெற்றுத்தருவதாக பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது உறுதியளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :