கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.

ல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசஹிப் தனது முதல்வர் பதவியை  ராஜினாமா செய்யும் பொருட்டு,
 இன்று காலை (08.11.2013) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில் ராஜினாமா கடிதத்தை கையளித்தார். என இம்போட்மிரர் இணையத்துக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.அன்சில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:
இதன்போது தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கட்சியின் உத்தரவை ஏற்று தனது ராஜினாமாவை செய்தமைக்காக சிராஸிக்கு பாராட்டு தெரிவித்ததோடு கட்சியில் அவரது கண்ணியத்திற்க்கும், கெளரவத்திற்கும் தான் உறுயளிப்பதாக தெரிவித்தார்.

இதன் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களும் சிராஸ் மீராசாஹிப் அவர்களும்  கைலாகு கொடுத்து ”முஷாபஹா” செய்து கொண்டனர் என்றும், சிராஸ் மீராசாஹிபின் ராஜினாமா தொடர்பாகவும் எதிர்கால கல்முனை மாநகரசபை தொடர்பாகவும் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று சிராஸ்மீராசாஹிப், நிசாம் காரியப்பர் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் இன்று மாலை 3 மணிக்கு கொழும்பில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தவிசாளர் அன்சில் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :