Cargilles Food City FA Cup 2013 உதைபந்தாட்ட சுற்று போட்டி மருதமுனை ஈஸ்டர்ன் யூத் விளையாட்டு கழகத்திற்கும் வவுனியா ஈகல்ஸ் விளையாட்டு கழகத்திற்கும் இன்று மருதமுனை மசூர் மௌலான விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கலந்து கொண்டார். கெளரவ அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட ஸ்ரீ.ல.மு.கா. மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான ஏ.எம்.பாரக்கத்துள்ளா, கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஷீர், எம்.எஸ்.உமர் அலி காரைதீவு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் இஸ்மாயில் கலந்து சிறப்பித்தனர்.
போட்டியில் மருதமுனை ஈஸ்டர்ன் யூத் விளையாட்டு கழகம் 3 கோல்களை பெற்று வெற்றி பெற்றது.




0 comments :
Post a Comment