மாவனல்லையில் 116 வயதான மூதாட்டி - படம்

மாவனல்ல பலத்கமவில் பிறந்த அப்புலன்லே உக்கு என்ற 116 வயதான மூதாட்டிக்கு சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா வெரது தேவைகளுக்காக நிதியுதவி வழங்கியுள்ளார்.

1897 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி பிறந்த அப்புலன்லே உக்கு என்ற 116 வயதுடைய மூதாட்டியே இலங்கையிலேயே உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் ஆகக்கூடிய வயதுடைய பெண்ணாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இவர் இலங்கையில் சிரேஷ்ட பிரஜையாகவும் கருதப்படுகிறார். இந்த மூதாட்டியின் இல்லத்துக்கு விஜயம் செய்த சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா, சுகம் விசாரித்ததுடன் அவரது தேவைகளுக்காக ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவை அன்பளிப்பாகவும் வழங்கினார்.

சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் இமெல்டா சுகுமார், சமூக சேவைகள் பணிப்பாளர் அனூஷா கோகுல மற்றும் மாவனல்லை பிரதேச செயலாளர் ஆகியோரும் இதில் கலந்துக் கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :