காரைதீவில் முதல் முறையாக யூனானி மருத்துவ நிலையம் திறப்பு


வி.ரி.சகாதேவராஜா-

காரைதீவில் முதல் முறையாக யூனானி மருத்துவ நிலையம் இன்று (13) திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

காரைதீவின் முதலாவது யூனானி மருத்துவர் திருமதி உமா ரமணன் டிலக்ஷனா இந்த நிலையத்தை திறந்து வைத்தார்.

விஷ்ணு ஆலய சிவாச்சாரியார் சிவஸ்ரீ தியாகராஜ குருக்களின் சமய கிரியைகளுடன் சுப வேளையில் இப் பிரத்தியேக நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

திறப்பு விழாவில் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு.பாஸ்கரன், முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறில், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா, சட்டத்தரணி இ.ரகுபதி உள்ளிட்ட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :