முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க தயாராக இல்லையெனவும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்க தயாராகவுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தென்மாகாண சபைக்கான ஐ.தே.க. வின் முதலமைச்சர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்கும் படி ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றும், தேசிய பிக்கு முன்னணியும் கட்சியின் உயர் பீடத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சஜித் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க தயாராக இல்லையென தெரிவித்துள்ளார்.
மேலும் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கவும், ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்க தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தான் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதையே பொதுமக்கள் விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தென்மாகாண சபைக்கான ஐ.தே.க. வின் முதலமைச்சர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்கும் படி ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றும், தேசிய பிக்கு முன்னணியும் கட்சியின் உயர் பீடத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சஜித் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க தயாராக இல்லையென தெரிவித்துள்ளார்.
மேலும் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கவும், ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்க தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தான் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதையே பொதுமக்கள் விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments :
Post a Comment