மாலைதீவுகள் பொலிஸ் ஆணையாளர் அப்துல்லா றியாஸ் மாலைதீவு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றில் மாலைதீவுக்குள் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு மாலைதீவு பொலிஸ் அதிகாரிகளை அயல் நாடுகளில் நிலைகொள்ளச் செய்வதற்கான தேவைப்பாடு குறித்து வலியுறுத்தியுள்ளார்.
மாலைதீவில் இடம்பெற்று வரும் போதைப் பொருள் கடத்தலில் வெளிநாட்டவர்கள் பெருமளவில் ஈடுபட்டு வருவதனைச் சுட்டிக் காட்டிய றியாஸ் நாட்டிற்குள் போதைப் பொருட்கள் அபரிமிதமாகக் கொண்டு வரப்படுவதனைத் தடுக்கும் வகையில் மாலைதீவு பொலிஸார் அண்டை நாடுகளில் சேவையாற்ற வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
இந்தியா அல்லது இலங்கையிலிருந்தே போதைப் பொருள் வர்த்தகம் இடம்பெற்று வருகின்றது. அதனைத் தடுக்கும் பொருட்டு எமது பொலிஸ் படையணி இந்தியாவிலும் இலங்கையிலும் நிலை கொண்டிருப்பது அவசியமாகுமெனவும் றியாஸ் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment