குடி­நீரைக் கேட்டுப் போராடிய மக்­க­ளுக்கு அர­சாங்கம் துப்­பாக்கிக் குண்­டு­களைப் பரி­ச­ளித்­துள்­ளது.

குடிப்­ப­தற்கு சுத்­த­மான குடி­நீரைக் கேட்டுப் போராட வேண்­டிய அவ­லத்­துக்­குள்­ளான மக்­க­ளுக்கு ராஜ­பக்ஷ அர­சாங்கம் துப்­பாக்கிக் குண்­டு­களைப் பரி­ச­ளித்­துள்­ளது. உல­கத்தில் வேறு எங்­குமே இது­போன்ற சம்­ப­வங்கள் இடம்­பெற்­ற­தில்லை. 

வெலி­வே­ரிய பகு­தியில் இரா­ணுவம் நடத்­திய அரா­ஜ­கத்தை கண்டு நாம் மட்­டு­மல்ல சர்­வ­தே­சமே அதிர்ச்­சிக்­குள்­ளாகி இருக்­கி­றது என்று எதிர்க்­கட்சித் தலை­வரும் ஐ.தே.க.வின் தலை­வ­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க குறிப்­பிட்டார்.

மத்­திய மாகாண சபைத்­தேர்­தலில் மாத்­தளை மாவட்­டத்­தி­லி­ருந்து ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சார்பில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­க­ளுக்­கான முத­லா­வது தேர்தல் பிர­சார கூட்டம் சனிக்­கி­ழமை காலை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வஸந்த அலு­வி­கா­ரவின் இல்­லத்தில் நடை­பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். சுமார் ஆயிரம் பேர் வரை­யி­லான கட்சி ஆத­ர­வா­ளர்கள் திரண்­டி­ருந்த இக்­கூட்­டத்தில் எதிர்க்­கட்­சித்­த­லைவர் தொடர்ந்தும் பேசு­கையில்,

மத்­திய மாகாண தேர்தல் முடி­வு­களே இந்த அர­சாங்­கத்தின் தலை­வி­தியை நிர்­ண­யிக்கப் போகி­றது. இது சாதா­ரண மாகாண சபைத் தேர்தல் அல்ல.

இந்த அர­சாங்­கத்தை வீட்­டுக்கு அனுப்­பு­வ­தற்­கான ஒரு தேர்­தலே இது­வாகும். ஒரே நாளில் நடந்து முடிக்­க­வி­ருந்த தேர்­தல்­களை கட்டம் கட்­ட­மாக நடத்தி ஒவ்­வொரு தேர்­த­லுக்கு முன்­பா­கவும் அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலையை அரசு உயர்த்தி வரு­கி­றது. 

உணவுப் பண்­டங்­க­ளுக்கு அதி உயர்ந்த வரியை அற­விடும் ஒரே நாடு இலங்­கையே. ரின் மீனுக்கு 100சத­வீத வரி, பருப்­புக்கு 22 சத­வீத வரி, கரு­வாட்­டுக்கு 75 சத­வீத வரி என எல்லா உணவுப் பண்­டங்­க­ளுக்­குமே எக்­கச்­சக்­க­மான வரி அற­வி­டப்­ப­டு­கி­றது. இந்த நாடு அந்­நிய நாடு­க­ளிடம் பெற்­றி­ருக்கும் கட­னுக்கு வட்டி செலுத்­து­வ­தற்கே ஒவ்­வொரு குடி­ம­கனும் மூன்று இலட்சம் ரூபாவைச் செலுத்த வேண்­டி­யுள்­ளது.

இந்த நாட்டில் யுத்தம் நடை­பெற்ற போது மிகக் கூடு­த­லான இரா­ணுவ வீரர்­களைப் போருக்கு அனுப்பி வைத்­தது வெலி­வே­ரிய பிர­தே­சமே. அந்த வீரர்கள் பெற்­றுக்­கொ­டுத்த வெற்­றியை வியா­பாரப் பண்­ட­மாக மாற்றி அரசு தனது நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கி­றது. 

சிவில் நிர்­வாகம் நடை­பெற்று வந்த வெலி­வே­ரிய பகுதி மக்கள் தமக்கு சுத்­த­மான குடிநீர் வேண்­டு­மென போராட முன்­வந்த போது இரா­ணு­வத்தை அனுப்பி அரா­ஜகம் நடத்­தி­யுள்­ளது. அங்கு மட்­டு­மல்ல முழு நாடுமே இன்று சிவில் நிர்­வா­கத்தை இழந்து இரா­ணுவ ஆட்­சிக்­குக்­கீ­ழேயே இயக்­கப்­பட்டு வரு­கி­றது.

கப்பல் இல்­லாத துறை­முகம், விமானம் இல்­லாத விமா­னத்­தளம் எல்­லாமே இங்­குதான் இருக்­கி­றது. நாட்டில் சட்டம் ஒழுங்கு அனைத்தும் சீர்­கு­லைந்து போயுள்­ளது. பொலிஸ் அதி­கா­ரிகள் பணத்­திற்­காக கொலை செய்­கி­றார்கள் என்று கைது செய்­யப்­ப­டு­கி­றார்கள். 

பால் மணம் மாறா பச்சை குழந்­தை­களும் கூட கடத்திச் செல்­லப்­பட்டு துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. எங்கும் அரா­ஜகம் எவ­ருக்கும் தட்­டிக்­கேட்க முடி­யாது நமக்குத் தேவை நாட்டில் ஊழல் இல்லாத ஒரு ஜனநாயக ஆட்சி அத்தகைய ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் இதுவல்ல. என்றாலும் அரசுக்கு ஒரு செய்தியை இத்தேர்தல் முடிவு வழங்க வேண்டும். எனக்குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :