மீண்டும் பிளவுபடுகிறது முஸ்லிம் காங்கிரஸ்

ட மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடத்தில் எழுந்த முரண்பாடுகள் காரணமாக அக் கட்சி மற்றுமொரு பிளவை  எதிர்கொண்டுள்ளது.

வட மாகாண சபைத் தேர்தலில் மு.கா. தனித்துக் கேட்க வேண்டும் என ஒருசாராரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட வேண்டும் என மற்றொருசாராரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் வடக்கில் தனித்து நின்று மரச் சின்னத்திலேயே போட்டியிடுவது என கட்சியின் தலைமைத்துவமும் உயர்பீடமும் தீர்­மா­னித்­தி­ருந்­தது.

இத் தீர்­மா­னத்­தினால் அதி­ருப்­தி­யுற்ற சிலர் தற்­போது மு.கா.விலி­ருந்து வெளியேறி ஐ.ம.சு.சுதந்­திரக் கூட்­ட­மைப்­புடன் இணைந்து கொண்­டுள்­ள­தா­கவும் நடை­பெ­ற­வுள்ள தேர்­தலில் ஐ.ம.சு.கூட்­ட­மைப்பு பட்­டி­யலில் போட்­டி­யி­ட­வுள்­ள­தா­கவும் தெரி­ய­வ­ரு­கி­றது.

மு.கா. அர­சுடன் இணைந்து போட்­டி­யிட வேண்டும் என கட்­சியின் தவி­சா­ளரும் அமைச்­ச­ர­மாக பஷீர் சேகு­தாவூத் வலி­யு­றுத்தி வந்தார். இருப்­பினும் அவர் இறு­தி­யாக இடம்­பெற்ற கட்­சியின் உயர்­பீடக் கூட்­டத்தில் பங்­கேற்­றி­ருக்­க­வில்லை.

இதற்­கி­டையில் இறு­தி­யாக நடை­பெற்ற உயர்­பீடக் கூட்­டத்தில் கலந்து கொண்ட வடக்கை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் உறுப்­பி­னர்கள் சிலர் அன்­றைய தினம் கட்சித் தலை­மை­யுடன் கடும்­வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்டு கூட்­டத்­தி­லி­ருந்து வெளியே­றி­ய­தா­கவும் அதன் பிற்­பாடு கட்­சி­யுடன் எந்­த­வித தொடர்­பி­னையும் ஏற்­ப­டுத்­த­வில்லை எனவும் மு.கா. முக்­கி­யஸ்தர் ஒருவர் தெரி­வித்தார். 

இவ்­வாறு வெளி­ந­டப்புச் செய்த உறுப்பினர்களே ஐ.ம.சு.கூட்டமைப்பு பட்டியலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த வாரம் மு.காவின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் வடமேல் மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான யெஹியா ஆப்தீன் கட்சி மீது அதிர்ப்தி கொண்டு அரசாங்கத்தோடு இணைந்துகொண்டார். 

அவர் வடமேல் மாகாண சபைத்தேர்தலி ஐ.ம.சு.கூ சார்பாக புத்தளத்தில் போட்டியிடுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.(v.v).
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :