ஒரே நாள் துப்பாக்கிச் சூட்டில் 278 பேர் பலி மற்றும் 2000ம் பேருக்கு படுகாயம்

கிப்தில் அதிபராக இருந்த மோர்சி, மக்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்று கூறி ராணுவம் அவரை கடந்த மாதம் ஆட்சியிலிருந்து அகற்றியது. பின்னர் கைது செய்யப்பட்ட அவர் இதுவரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனால், கொதிப்படைந்த அவரது ஆதரவாளர்கள் பல்லாயிரக் கணக்கானோர் மோர்சியை மீண்டும் பதவியில் அமர்த்த கோரி தலைநகர் கெய்ரோவில் ரபா-அல்-அடாவியா என்ற முகாம் அமைத்து போராட்டம் நடத்தி வந்தனர்.

அவர்களை கலைந்து செல்லும்படி பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. அதனால் மோர்சியின் ஆதரவாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த போலீசார் நேற்று காலை களத்தில் இறங்கினர்.

அப்போது கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போலீசாருடன் போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டனர். பின்னர் அது கலவரமாக மாறியது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கலவரத்தை கட்டுப்படுத்தினர். 

பேராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் இன்று அதிகாலை நிலவரப்படி, 278 போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், சுமார் 2 ஆயிரம் பேர் படுகாயமடைந்ததாகவும் முஹம்மது மோர்சியின் ஆதரவாளர்கள் கூறினர்.

போலீசார் தரப்பில் 43 பேர் பலியாகியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

கெய்ரோ நகரின் பல பகுதிகள் போர்க் களம் போல் காணப்படுகின்றன. துப்பாக்கிச் சூட்டில் இறந்த உறவினர்களின் பிரேதங்களை உறவினர்கள் தேடும் காட்சிகளும், இறந்தவர்களின் மனைவி, பிள்ளைகள் பிணங்களின் மீது விழுந்து கதறியழும் காட்சிகளும் நெஞ்சை நெகிழச் செய்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :