பஷில் ராஜபக்ஷ ஏமாற்றத்துடன் நாடு திரும்பியுள்ளார்.

ந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி ஆகியோரைச் சந்திப்பதற்குப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ எடுத்த முயற்சி வெற்றியளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அவர் ஏமாற்றத்துடன் நேற்று மதியம் நாடு திரும்பியதாகவும் கூறப்படுகின்றது.

இந்திய அரசின் அழைப்பின் பேரில் அங்கு சென்ற பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, இலங்கை அரசின் "13´ ஆவது திருத்த ஒழிப்புத் தொடர்பில் இந்தியத் தலைவர்களுடன் கலந்துரையடத் திட்டமிட்டிருந்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சரை அவர் சந்தித்துப் பேசினார். இதன் பின்னர் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி ஆகியோரைச் சந்திப்பதற்கு அவர் முயன்ற போதும் அது இறுதிவரை கை கூடவில்லை.

பஷில் ராஜபக்ஷவின் வேண்டுகோளை, இந்தியப் பிரதமர் அலுவலகம் நிராகரித்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அவர் ஏமாற்றத்துடன் நாடு திருமபியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :