மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தனவின் இறுதிக் கிரியைகள் இன்று.


க்கிய தேசியக் கட்சியின் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தனவின் இறுதிக் கிரியைகள் இன்று (02) மாலை இடம்பெறவுள்ளது.

ஜா-எல, வெலிகம்பிட்டிய றோமன் கத்தோலிக்க மயானத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இவரது பூதவுடல் ஜா-எல, வெலிகம்பிட்டியவிலுள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பல அரசியல்வாதிகள் அவரது உடலிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அண்மையில் இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிங்கப்பூரிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது கடந்த மாதம் 30ஆம் திகதி காலமானார்.

1959ஆம் ஆண்டு பிறந்த டாக்டர் ஜயலத் ஜயவர்தன தனது 59வது வயதில் காலமானார். 

டாக்டர் ஜயலத் ஜயவர்தன 1994ம் ஆண்டு முதல் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கிறார்.

2002ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இவர் புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சராக பணிபுரிந்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :