
வத்தளை மற்றும் களனி பிரதேசத்தில் பல பகுதிகளுக்கு 24 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று புதன்கிழமை 5ம் திகதி காலை 10 மணி தொடக்கம் நாளை வியாழக்கிழமை 6ம் திகதி காலை 10 மணிவரை இந்த நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.வத்தளை - ஹேக்கித்த வீதி மற்றும் அதனை அண்டிய குறுக்கு வீதிகள், ஹெந்தல வீதி மற்றும் அதனை அண்டிய குறுக்கு வீதிகள், நீர்கொழும்பு வீதி ஹேக்கித்த தொடக்கம் ஹெந்தல சந்திவரையான பிரதேசங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், களனி தெலகம்பான வீதி மற்றும் அதனை அண்டிய குறுக்கு வீதிகள் மற்றும் மீன்சந்தை பகுதி என்வற்றுக்கு நீர்விநியோகம் தடைப்படவுள்ளதென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment