IPL சீசன் 6-ன் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.


மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 23 ஓட்டங்களால் வீழ்த்தி 6-வது ஐ.பி.எல். கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

ஐ.பி.எல். சீசன் 6-ன் இறுதிப்போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் தொடங்கியது.

இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற மும்பை அணி தலைவர் முதலில் துடுப்பெடுத்தாட்டத்தை தெரிவு செய்தார்.

தொடக்க வீரர்களாக டிவைன் சுமித்- டரே களம் இறங்கினார்கள். தொடக்க ஓவரே மும்பை அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. ஆட்டத்தின் 3-வது பந்தில் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் கிளீன்போல்டாகி வெளியேறினார். அடுத்து 2-வது விக்கெட்டுக்கு டரேவுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். 2-வது ஓவரை மோர்கல் வீசினார். முதல் பந்தில் டரே கிளீன்போல்டாகி வெளியேறினார் அடுத்துவந்த தலைவர் ரோகித் சர்மா 2 ஓட்டங்கள் எடுத்த திருப்தியில் மோர்னே பந்தில் அவரிடமே பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

தினேஷ் கார்த்திக் 21 ஓட்டங்களை எடுத்த நிலையில் மோரிஸ் பந்தில் ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு ராயுடுவுடன் பொல்லார்டு ஜோடி சேர்ந்தார். ராயுடு 36 பந்தில் 37 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்தவர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனாலும் பொல்லார்டு சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் கடைசி ஓவரின் 5-வது மற்றும் 6-லது பந்தில் இரண்டு இமாலய சிக்சர் விளாசினார். இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்களை எடுத்தது.

சென்னை அணி சார்பில் பிராவோ சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட் வீழ்த்தினார்.

149 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி துடுப்பெடுத்தாட தொடங்கியது. ஹசி- விஜய் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை மலிங்கா வீசினார். முதல் ஓவரே சென்னை அணிக்கு பேரிடியாக அமைந்தது. ஹசி 4-வது பந்தில் கிளீன் போல்டானார். அடுத்த வந்த ரெய்னா முதல் பந்திலேயே பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரை ஜான்சன் வீசினார். 

அந்த ஓவரில் 4-வது பந்தில் பத்ரிநாத் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் டக் ஆட்டமிழந்தார். இதனால் சென்னை அணி 1.4 ஓவரில் 3 ஓட்டங்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டை இழந்தது.

அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க சென்னை அணியின் தோல்வி உறுதியானது. தலைவர் டோனி மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காது 63 ஓட்டங்களை எடுத்தார். சென்னையில் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ஓட்டங்களை எடுத்தது. இதனால் மும்பை அணி 23 ஓட்டங்களில் அபார வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :