மகிந்த ராஜபக்ஷ அரசில் இருந்து சில முஸ்லிம் அரசியல் வாதிகள் நாடகமாடுகின்றனர்-முஸ்தபா

ஹிந்த ராஜபக்ச அரசாங்கத்திலுள்ள சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தாங்கள் அரசாங்கத்திலிருந்து விலகப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டு நாடகமாடுகின்றனர் என பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

அவர்கள் இப்படியே கூறிக் கொண்டிருப்பதனை விட்டு விட்டு விலகுவதாயின் விலகிச் சென்று விட வேண்டும். தெருநாய் தனது வாலை ஆட்டும் திசையில் போவதில்லை. அதுபோன்றே சில முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று அரசாங்கத்தை விட்டு விலகப் போகிறோம் என கூறிக் கொண்டு நாடகமாடுகின்றனர்.

நாங்கள் அரசாங்கத்தை விட்டு விலகப் போகிறோம் என அரசாங்கத்துடன் உள்ள சில முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் சொல்கிறார்கள். ஆனால், அரசின் அனைத்து வரப்பிரசாதங்களையும் தொடர்ந்து அனுபவித்துக் கொண்டு ஒட்டிக் கொண்டே உள்ளனர்.

இவ்வாறானவர்கள், தங்களது கட்சியின் கௌரவத்தைப் பாதுகாத்துக் கொண்டு அரசுடன் இருக்க வேண்டும் அல்லது அரசாங்கத்தை விட்டு விலகிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :