புத்தளம் பாலாவியில் வாகன விபத்து குடும்பஸ்தர் பலி.

புத்தளம் பொலீஸ் பிரிவுக்குற்பட்ட பாலாவி நாகவில்லு பகுதியில் இன்று 13.05.2013 திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டி மீள்குடியேற்றக் கிராமத்தைச் சேர்ந்த எம்.ஐ.ரம்ஸீன் (வயது 32) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.


கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நேக்கிச் சென்ற வான் ஒன்று இவர் மீது மோதியதிலேயே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் படுகாயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


குறித்த வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ள புத்தளம் பொலிஸார் இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :