நாங்கள் நிதி திரட்டியதனை நிருபித்தால் அமைப்பை கலைத்து விடுவோம்-BBS

பொதுபல சேனா அமைப்பானது நோர்வே, அமேரிக்கா உள்ளிட்ட மேற்கத்தைய நாடுகளிடம் நிதி திரட்டியதாக நிரூபித்தால், இரண்டு மணிநேரத்துக்குள் பொதுபலசேனா அமைப்பை கலைத்துவிடுவதாக அதன் செயலாளர் கலகொட எத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விமல் வீரவன்ச பொதுபல சேனா அமைப்பு மேற்கத்தைய நாடுகளில் நிரட்டியதாக கூறியதாகவும், அதனை அவர் நிருபிக்கும் படி தாம் சவால் விடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமது அமைப்பு மேற்கத்தைய நாடுகளிடம் இருந்து ஐந்து சதத்தைக் கூட பெறவில்லை எனவும் தேரர் கூறியுள்ளார்.

எது எவ்வாறு இருப்பினும் விமல் வீரவங்ச இந்தியாவின் சிவசேனா அமைப்புடன் தொடர்பில் உள்ளதா என்ற சந்தேகம் இருப்பதாக ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

பொதுபல சேனா குறித்து விமல் வீரவன்சவைப் போல சிலர் கூறிய விடயங்கள் அனைத்தும் பொய் எனவும் கொழும்பில் இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :