மாடுகள் அறுப்பதனை தடைசெய்வது சிரமமானது- அமைச்சர் ஜோன் செனவிரட்ன

லங்கையில் மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்படுவதை தடுக்க சட்டத்தை கொண்டு வருவது சிரமமானது என அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

தாம் தனிப்பட்ட ரீதியில் மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்படுவதை விரும்பவில்லை எனவும் இதனால் மாடுகள் கொடுமையான முறையில் கொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை பலவந்தமாக மத மாற்றங்களை செய்வதை விட பல்வேறு பரிசுகளை பெற்றுக்கொண்டு, வேறு மதங்களை தழுவிக்கொள்கின்றனர். அதனை தவிர்த்து கொள்வது மக்களின் கடமை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

சிலர் மாடுகளை சுமை ஊர்திகளில் ஏற்றி, அவற்றை கடுமையாக சித்ரவதை செய்து கொலை செய்வதை தான் மாத்திரமல்ல எவரும் அனுமதிக்க மாட்டார்கள் எனவும் செனவிரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :