மட்டக்களப்பு வாழைச்சேனை சுங்காங்கேனி பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவர் தனது இரு பிள்ளைகளுடன் மீராவோடை ஆற்றில் குதித்துள்ளார். சம்பவத்தில் குழந்தைகள் இருவரும் இறந்துள்ளனர் . சம்பவம் இன்று காலை 10 .45 மணியளவில் இடம்பெற்றுள்ளது .
குறித்த சம்பவத்தில் அவருடைய இரு குழந்தைகளான இலக்சினி வயது 07 மற்றும் மீனுஜா 03 வயதான ஆகிய இரு குழந்தைகளும் பலியாகியுள்ளன. குழந்தைகளின் சடலங்கள் மீராவோடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. பிரதேசவாசிகளினால் காப்பாற்றப்பட்ட தாய் மீராவோடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளதாக மீராவோடை வைத்தியஅதிகாரி சுஹையிர் தெரிவித்தார்.
குடும்ப பிரச்சினை காரணமாகவே குறிந்த தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருத்து தெரியவருவதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

0 comments :
Post a Comment