
(சம்மாந்துறை அன்சார்) தண்ணீர் இல்லாத ஒரு வாழ்வை எம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா...?? கொஞ்சம் களைத்துப் போனால் கூட நாம் உடனே நாடுவது தண்ணீரைத்தான்.
இந்த உலகத்தில் இருக்கும் எந்த குடிபானமாக இருந்தாலும் சரி அளவுக்கு மேல் அதனை அருந்த முடியாது தெகட்டி விடும். ஆனால் தண்ணீர் இவை எல்லாவற்றையும விட தலை சிறந்த ஒரு பாணமாக இருக்கும்.
இறைவனின் இவ்வளவு அற்புதமான ஒரு அருட்கொடையை இன்று நாம் வீண்விரயம் செய்து கொண்டிருக்கிறோம் காரணம் எமக்கு அளவுக்கு அதிகமாக தண்ணீர் கிடைக்கிறது.
ஆனால் ஒரு துளி தண்ணீர் இல்லாது உயிரையே மாய்த்துக் கொண்டிருக்கும் மக்களை நீங்கள் யோசித்துப் பார்த்திருப்பீர்களா....???
எமது எதிர்கால சந்ததியினருக்கு அந்த மக்களைப் போன்ற ஒரு துன்பம் வந்துவிடாது இருக்க வேண்டுமானால் நாம் ஒவ்வொருவரும் தண்ணீரைப் பாதுகாக்க வேண்டும்மல்லவா..?? சிந்தியுங்கள்.
0 comments :
Post a Comment