அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிப்பு.


(எம்.பைஷல் இஸ்மாயில்)

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு

மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலியின் கைதினைக் கண்டித்தும் அவரை விடுதலை செய்யும் படி கோரியும் இன்று (08) அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகளில் வியாபார நிலையங்கள் முற்றாக மூடப்பட்டு வீதிகள் வெறிச் சோடிக் காணப்படுகின்றது. இங்குள்ள பாடசாலைகள் திறக்கப்பட்டு அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சமூகமளித்திருந்தும் மாணவர்கள் மிக மிகக் குறைவாகவே சமூகமளித்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

இராணுவம் இப்பிரதேசத்தில் நேற்று இரவு தொடக்கம் குவிக்கப்பட்டு பிரதான வீதியில் எந்தவிதமான அசம்பாவிதங்கள் நடைபெபெறாமல் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அதுமட்டுமல்ல வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படா வண்ணம் இராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :