SLMC அதி உயர் பீடத்தினர் ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளனர்-ஹசன் அலி


சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர் பீடத்தினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அச்சந்திப்பின்போது, கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சருடன் முதலில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

பிரதேச முஸ்லிம் மக்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட உள்ளதாகவும், அதன் பின்னரே ஜனாதிபதியை தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தை நடத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அசாத் சாலிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட வேண்டும் அல்லது விடுதலை செய்யப்பட வேண்டுமென ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :