
(எம்.பைஷல் இஸ்மாயில்)
எதிர்வரும் மே 31 ஆம் திகதி முதல் ஜூன் 10 ஆம் திகதி வரை இதற்கான செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன் வறுமை நிலையிலுள்ள குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கம் என சமுர்த்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தில் இருந்து பெற்றுக்கொள்ளும் நிதியுடன் கொடி விற்பனை நலன் விரும்பிகளிடமிருந்து நன்கொடைகள் பெறப்பட்டும் சமுர்த்தி சங்கங்கள் மூலமாக நிதி சேகரிக்கப்பட்டும் இதற்கான நிதியின் வழங்குவதற்கு மிக கஷ்டமான குடும்பங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான பணியை சம்பந்தப்பட்ட கிராமத்தவர்களிடமே ஒப்படைக்கப்பட்டு அதன் மூலமாக வழங்கப்படும்.
உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு புகையிலை ஒழிப்பு தொடர்பான செயற்றிட்டங்களையும் சமுர்த்தி அதிகார சபை நடைமுறைப்படுத்தி வருகிறது. இது தொடர்பான கொடி விற்பனை மூலம் கிடைக்கும் நிதியும் வறுமை நிலை குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் இத்திட்டத்திற்காக செலவிடப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
திவி நெகும வாழ்வெழுச்சித் திட்டத்தின் மூலம் குடும்பங்களின் வறுமைக்கு ஒரு காரணியான புகைத்தல் பழக்கத்தை குடும்பங்களிலிருந்து இல்லாதொழிப்பதற்கு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக இத்தகைய குடும்பங்களுக்கும் மேற்படி திட்டத்தில் முன்னுரிமையளிக்கப்படவுள்ளது.
இத்துடன் குடும்பத்தின் பொருளாதாரம் பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்ப வசதி இல்லாத குடும்பங்களுக்கு உதவுதல் உள்ளிட்ட வறுமை நிலையிலுள்ள குடும்பங்களின் தேவைகள் ஆராயப்பட்டு இத்திட்டத்தின் மூலம் அவர்களை கை தூக்கி விடுவதே முக்கிய நோக்கமாக இருப்பதுடன் சமுர்த்தி அதிகார சபை பிரதி வருடமும் இத்தகைய வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருவதுடன் இம்முறை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கஷ்டமான குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றும் இலக்கில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது. என மேலும் அறியக்கிடைத்துள்ளது.
அரசாங்கத்தில் இருந்து பெற்றுக்கொள்ளும் நிதியுடன் கொடி விற்பனை நலன் விரும்பிகளிடமிருந்து நன்கொடைகள் பெறப்பட்டும் சமுர்த்தி சங்கங்கள் மூலமாக நிதி சேகரிக்கப்பட்டும் இதற்கான நிதியின் வழங்குவதற்கு மிக கஷ்டமான குடும்பங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான பணியை சம்பந்தப்பட்ட கிராமத்தவர்களிடமே ஒப்படைக்கப்பட்டு அதன் மூலமாக வழங்கப்படும்.
உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு புகையிலை ஒழிப்பு தொடர்பான செயற்றிட்டங்களையும் சமுர்த்தி அதிகார சபை நடைமுறைப்படுத்தி வருகிறது. இது தொடர்பான கொடி விற்பனை மூலம் கிடைக்கும் நிதியும் வறுமை நிலை குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் இத்திட்டத்திற்காக செலவிடப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
திவி நெகும வாழ்வெழுச்சித் திட்டத்தின் மூலம் குடும்பங்களின் வறுமைக்கு ஒரு காரணியான புகைத்தல் பழக்கத்தை குடும்பங்களிலிருந்து இல்லாதொழிப்பதற்கு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக இத்தகைய குடும்பங்களுக்கும் மேற்படி திட்டத்தில் முன்னுரிமையளிக்கப்படவுள்ளது.
இத்துடன் குடும்பத்தின் பொருளாதாரம் பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்ப வசதி இல்லாத குடும்பங்களுக்கு உதவுதல் உள்ளிட்ட வறுமை நிலையிலுள்ள குடும்பங்களின் தேவைகள் ஆராயப்பட்டு இத்திட்டத்தின் மூலம் அவர்களை கை தூக்கி விடுவதே முக்கிய நோக்கமாக இருப்பதுடன் சமுர்த்தி அதிகார சபை பிரதி வருடமும் இத்தகைய வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருவதுடன் இம்முறை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கஷ்டமான குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றும் இலக்கில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது. என மேலும் அறியக்கிடைத்துள்ளது.
0 comments :
Post a Comment