சென்னை: காசோலை மோசடியில் கைதான நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் புழல் சிறையில் அடைக்கப் பட்டார்.இதுகுறித்து கூறப் படுவதாவது;
ஆந்திராவைச் சேர்ந்த தொழில் அதிபர் ரங்கநாதன் என்பவரிடம் இருந்து நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ரூ.50 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால் பவர் கொடுத்த காசோலையை ரங்கநாதன் வங்கியில் போட்ட போது அது திரும்பி வந்தது. மீண்டும் பணத்தை கேட்ட ரங்கநாதனை பவர் ஸ்டார் மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, தொழில் அதிபர் ரங்கநாதன் பவர் ஸ்டார் மீது சென்னை காவல்துறை கமிஷனரிடம் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், குற்றப்பிரிவு காவல்துறையினர் பவர் ஸ்டார் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
பின்பு இன்று காலை பவர் ஸ்டார் இல்லத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.இன்னேரம்.
0 comments :
Post a Comment