ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் மீட்பு.-கரந்தெனியவில் சம்பவம்.


கொலை செய்யப்பட்டு இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் வகையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கரந்தெனிய, கொடவெல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இன்று (27) பகல் தாய், மகள் மற்றும் மகனின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவர்களது வீட்டிலிருந்து துர் நாற்றம் வெளியேறியதைத் தொடர்ந்து நபர் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதன்படி வீட்டிற்குச் சென்ற பொலிஸார் மூன்று சடலங்களை மீட்டுள்ளனர்.

39 வயதான தாய் மற்றும் 9, 7 வயதான பிள்ளைகள் ஆகியோரது சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் கரந்தெனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :