(எமது செய்தியாளர்)
சென்னை:தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் டூ தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. மொத்தம் 8 லட்சத்து 56 ஆயிரம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதுகின்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 5 ஆயிரத்து 769 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 பேரும், தனித்தேர்வர்களாக 48 ஆயிரத்து 788 பேரும் இந்தத் தேர்வினை எழுதுகின்றனர். இதற்காக 2 ஆயிரத்து 20 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு எழுதும் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை கண்காணிக்கும் பொருட்டு 5 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வில் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதற்கு உதவியாக இருக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment