ஜம்இய்யத்துல் உலமா சபையை அவமதிப்பது, இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களை அவமதிப்பதற்கு சமமானது - ஹஸன் அலி


எவ்வித கௌரவமும் வழங்காது, ஜம்இய்யத்துல் உலமா சபையின் உலாமக்கள் மீது விமர்சனங்களையும், அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதும்  முழு முஸ்லிம் மக்களின் மனங்களையும் புண்படுத்தும்  நடவடிக்கையாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகம் ஹசன் அலி  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஐம்இய்யத்துல் உலமா சபையை  அவமதிப்பது, இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களை அவமதிப்பதற்கு சமமானது.

அண்மைகாலமாக முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து திட்டமிட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஹலால் என்பது இந்த பிரச்சினையில் ஒரு அங்கமாகும்.  இலங்கை முஸ்லிம்கள் மிகவும் கௌரவமாகவும் ஆத்ம அபிமானத்துடனும் வாழ்ந்து வரும் சமூகம் என்பதால்,  தற்போது எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் காரணமாக அவர்கள் வெறுப்படைந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :