குவைத் சிட்டி:ஈராக் ஏர்வேஸ் 22 ஆண்டுகளுக்கு பிறகு குவைத்திற்கு நேரடியாக விமான சேவையை துவக்கியுள்ளது. நேற்று முதன் முதலாக குவைத் விமான தளத்தில் இறங்கிய ஈராக் விமானத்தில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹோசியார் ஸெபரியும் இருந்தார்.
1990ஆம் ஆண்டு குவைத்தை ஈராக் ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையேயான விமான சேவை ரத்தானது.
மகிழ்ச்சியான சூழலில் முதல் விமானம் குவைத்தில் இறங்கியதாக ஈராக் ஏர்வேஸின் ஜெனரல் மேனேஜர் மாஜித் அல் அமீரி தெரிவித்தார்.
இரு நாடுகள் இடையேயான பொருளாதார, விஞ்ஞான, சுற்றுலா துறைகளில் உறவை மேலும் வலுப்படுத்துவதற்காக விமான சேவை துவக்கப்பட்டுள்ளது.
வாரத்தில் 3 சர்வீஸ்கள் நடத்தப்படும்.

0 comments :
Post a Comment