வெளிநாடுகளில் உள்ள தூதுவராலயங்களின் செயற்பாடுகள் தொடர்பில் அரசுக்கு முறைபாடுகள்






















சவூதி அரேபியாவில் இலங்கை பணிப்பெண்ணான ரிசானா நபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதுவராலய நடவடிக்கைகளை திருத்தியமைக்க அரசு தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதுவர்கள் மற்றும் உயரிஸ்தானிகர்களை நாட்டுக்கு அழைத்து அவர்களது பணி  தொடர்பில் விளக்கமளிக்க அரசு  தீர்மானித்துள்ளதாக அரசின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான வெளிநாடுகளில் உள்ள தூதுவராலயங்களின் செயற்பாடுகள் தொடர்பில் அரசுக்கு முறைபாடுகள் பல கிடைத்துள்ள நிலையில் அதுதொடர்பில் ஆராயப்படுமெனவும் எதிர்காலத்தில் தூதுவராலயப் பணிகளை வேறுபடுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தெரிகிறது.

இதேவேளை எதிர்வரும் மார்ச்மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை தொடர்பான கூட்டத்தொடரை இலக்காகக்கொண்டு மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளின் உதவியுடன் ஏனைய நாடுகளின் ஆதரவை இலங்கை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் தூதுவர்களை  சந்திக்கும் போது விளக்கமளிக்கப்படவுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :