எம்.வீ. அமீனா என்னும் பெயருடைய ஈரானிய சரக்குக் கப்பல் ஒன்றே இவ்வாறு இலங்கைக் கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது.
ஜெர்மனியின் டீ.வி.பி. வங்கியினால் பெற்றுக்கொள்ளப்பட்ட நீதிமன்ற உத்தரவிற்கு அமைய கப்பல் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக இலங்கைக் கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
தப்பிச் சென்ற கப்பலின் மீது எச்சரிக்கை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதாகவும் அதனைப் பொருட்படுத்தாது கப்பல் பயணம் செய்ததாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக் கடற்பரப்பிலிருந்து 12 கடல் மைல் தொலைவிற்கு சென்றதன் பின்னர் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்டத்தின் பிரகாரம் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்க முடியாது என கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
ஜெர்மனிய வங்கியின் கோரிக்கைக்கு அமைய குறித்த கப்பலை தடுத்து வைக்குமாறு கடந்த டிசம்பர் மாதம் 12ம் திகதி உயர் நீதிமன்றம், கடற்படையினருக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment