சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் பெண் சாரணர் அங்குரார்ப்பன நிகழ்வு


சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் (தேசிய பாடசாலை) பெண் சாரணர் அங்குரார்ப்பன நிகழ்வும், முழு நாள் பயிற்சிப் பட்டறையும் திங்கட்கிழமை பாடசாலையில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் எஸ்.ஏ. அபூபக்கர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட சாரண ஆணையாளர் ஐ.எல்.ஏ. மஜீத், முன்னாள் மாவட்ட சாரண ஆணையாளரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.ஐ.எம். முஸ்தபா, உதவி மாவட்ட சாரண ஆணையாளர்களான கே.எம். தமீம், எஸ்.எல். முனாஸ் (அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்) மற்றும் எம்.எப். றிபாஸ் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

மேற்படி பெண் சாரணர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் சாரணியம் தொடர்பான பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. 

நிகழ்வின் இறுதியில் சாரணர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. 
 






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :