இலங்கையின் சவுதிக்கான புதிய தூதுவர் நியமனம்.

AD.மூன்று நாடுகளுக்கான புதிய இராஜதந்திரிகளை நியமிக்க இலங்கை வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. 

அதன்படி, சவுதி அரேபியா, மலேசியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். 

இந்த நியமனங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்தப்படுவதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். 

விரைவில் குறித்த நாடுகளுக்கான தூதுவர்கள் பெயரிடப்பட்டு அங்கு அனுப்பி வைக்கப்படுவர் என அவர் தெரிவித்தார். 

இலங்கை பணிப்பெண்ணான ரிசானா நபீக் சவுதி அரேபியாவில் சிரச்சேதம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை அடுத்து இலங்கை சவுதி தூதுவரை திருப்பி அழைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :