AD.மூன்று நாடுகளுக்கான புதிய இராஜதந்திரிகளை நியமிக்க இலங்கை வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி, சவுதி அரேபியா, மலேசியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இந்த நியமனங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்தப்படுவதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
விரைவில் குறித்த நாடுகளுக்கான தூதுவர்கள் பெயரிடப்பட்டு அங்கு அனுப்பி வைக்கப்படுவர் என அவர் தெரிவித்தார்.
இலங்கை பணிப்பெண்ணான ரிசானா நபீக் சவுதி அரேபியாவில் சிரச்சேதம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை அடுத்து இலங்கை சவுதி தூதுவரை திருப்பி அழைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி, சவுதி அரேபியா, மலேசியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இந்த நியமனங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்தப்படுவதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
விரைவில் குறித்த நாடுகளுக்கான தூதுவர்கள் பெயரிடப்பட்டு அங்கு அனுப்பி வைக்கப்படுவர் என அவர் தெரிவித்தார்.
இலங்கை பணிப்பெண்ணான ரிசானா நபீக் சவுதி அரேபியாவில் சிரச்சேதம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை அடுத்து இலங்கை சவுதி தூதுவரை திருப்பி அழைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment