ரிஸானா நபீக்கை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றப் போராடிய ஜனாதிபதிக்கு நன்றி - அஸ்வர்

ரிஸானா நபீக்கை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றப் போராடிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தனது நன்றிகளைத் தெரிவிப்பதாக தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் இன்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். ரிஸானாவைக் காப்பாற்ற ஜனாதிபதி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், சவூதி மன்னரும் ரிஸானாவைக் காப்பாற்ற முயற்சிகளை மேற்கொண்டதாகத் தெரிவித்தார். ரிஸானா மரண தண்டனைக்குட்படுத்தப்பட்டமைதொடர்பில் தனது கவலைகளைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஜனாதிபதிக்கும் சவூதி மன்னருக்கும் தனது நன்றினைத் தெரிவித்தார். இதற்கிடையில் அப்பாவி ரிஸானாவைக் காப்பாற்றுவதற்கு அரசாங்கமும் ஜனாதிபதியும் தவறிவிட்டதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :