கற்பை பறித்த காதல் வாழுமா...??? நேசமுடன் ஹாசிம்

Share on



தேன் சொட்டும் வார்த்தைகள் 
நம்பிக்கை தரும் நடத்தைகளென 
மயக்கும் மந்திரங்களுடன் 
மங்கையே உனைக்கவர 
மன்னவனாய்த் தொடர்கிறான் 

நீ சிந்தித்திருந்த கட்டுப்பாடுகளையும் 
பயந்திருந்த எதிர்காலத்தினையும் 
துச்சமாய் உனக்கறிவித்து 
துணிவுடன் வலை வீசுகிறான் 

காதலென்ற காந்தமெடுத்து 
இரும்பாயிருந்த உனைக்கவர்ந்து 
சுற்றமும் மறந்திடச்செய்து 
சில்மிசங்களில் உனையாழ்த்தி 
அவனைத்தொடர வசியம் செய்கிறான் 

பெண்ணே நின்று நிதானித்துக்கொள் 
அற்பம் அவனின் ஆசைதீர்க்க 
பணயமுன் கற்பைக்கேட்கிறான் 
அவனின் கழிவகற்றும் (குப்பைக்)
கிடங்காய் மாற்ற நினைக்கிறான் 


உன் மீது அன்பென்று உரைத்தவன் 
உடல்மீது ஆசைகொண்டதெதற்கு 
வைத்த அன்பிற்கு வெகுமதியின்றி 
காதலுக்குத் துரோகம் நினைக்கிறான் 


உரிமையுனை ஆக்காது 
உடலைக் கொள்ளையடிக்கிறான் 
வெற்றிகண்டுவிட்டதில் வேறிடம் 
செல்லத் துணிகிறான் 
பறிகொடுத்து பரிதவிப்பது நீயாகிறாய் 

அன்புச் சகோதரி.......
அன்னிய ஆடவனின் கைகோர்த்த நீ 
தனிமையில் அவனுடன் பயணித்த நீ 
தொடுகைக்கு அனுமதி அளித்த நீ 
உன் வரம்புகளைக் கடந்து 
மதியையும் மனதையும் மழுங்கச்செய்தாய் 

உனை அடைந்தவன் மணந்திடான் 
உனை மணப்பவன் அடைந்திடான் 
தூக்கமின்றித் தெழிந்து கொள் 
துயரமின்றித் தொடர்வாய் 
காமத்தையும் காதலையும் 
அடையாளங்கண்டு கொள் 
கயவனைத் தூர வைத்துக் கொள்
நேசமுடன் ஹாசிம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :