“உலகம் அழிந்து விடும்” பீதியை கிளப்பிய 93 பேர் கைது

இந்த வாரம் உலகம் அழிந்து விடும் என துண்டு பிரசுரங்கள் விநியோகித்து பீதியை கிளப்பிய 93 பேர் சீனாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென் அமெரிக்காவில் பண்டைய காலத்தில் வாழ்ந்த மாயன் இனத்தவரின் காலண்டரில் 21.12.2012 உலகம் அழியும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர்.

உலக முழுவதும் இந்த காலண்டரின் கருத்தை நம்பும் பலர், உலகம் அழிவதை தடுப்பதற்காக சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

சீனாவில் “அல்மைட்டி காட்” என்ற அமைப்பை சேர்ந்தவர்கள், இந்த வாரம் உலகம் அழிந்து விடும், எனவே இந்த அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் சொத்துக்களை எல்லாம் ஒப்படைத்து விட வேண்டும் என கூறியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் சீனாவின் புஜியான், ஹூபி, சின்ஜியாங், குங் காய் உள்ளிட்ட பல மாகாணங்களில் துண்டு பிரசுரங்களை விநியோகித்து பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மக்களை பீதியடைய செய்ததற்காக இந்த அமைப்பை சேர்ந்த 93 பேரை சீன பொலிசார் கைது செய்துள்ளனர்.

செய்திகளைப்படித்த பெருமதிப்பிற்குரிய நீங்கள் அப்படியே கீழே உள்ள இம்போட்மிரர் பேஸ் புக் இல் உள்ள லைக் ஐ கிளிக் பன்னி உச்சாகப்படுத்தலாம். நன்றி...





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :