தனது திருமண வைபவத்துக்காக ஹோட்டலை நோக்கி காரில் சென்று கொண்டிருந்த மணப்பெண்ணை வழிமறித்து கடத்திச் சென்று கப்பம் கோரிய சம்பவம் ஒன்று எகிப்தில் இடம்பெற்றுள்ளது. இப் பெண்ணைக் கடத்திச் சென்ற 5 பேர் கொண்ட குழுவினரை 24 மணி நேரத்துக்குள் பொலிசார் கைது செய்துள்ளதுடன் மணப்பெண்ணையும் அவர்களிடமிருந்து பாதுகாப்பாக மீட்டுள்ளனர். மணப்பெண்ணை விடுவிப்பதா
னால் தமக்கு 1.19 மில்லியன் திர்ஹம்களை கப்பமாகத் தர வேண்டும் என கடத்தல்காரர்கள் கோரியுள்ளனர்.
மணப்பெண்ணின் குடும்பத்தினர் அதில் அரைவாசித் தொகையை கொடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தபோதிலும் விரைந்து செயற்பட்ட பொலிசார் மணப்பெண்ணை மீட்டெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடத்தல்காரர்களின் ஒருவர் குறித்த பெண்ணை ஏலவே காதலித்ததாகவும் தன்னை ஏமாற்றியதாலேயே இவ்வாறு கடத்திச் செல்ல முயன்றதாகவும் கைது செய்யப்பட்ட குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
.jpg)
0 comments :
Post a Comment