மினி சூறாவளியினால் பாதிக்கப்பட்ட வாகனேரி மக்களுக்கு நிவாரண உதவி


எச்.எம்.எம்.பர்ஸான்-

மினி சூறாவளியினால் பாதிக்கப்பட்ட வாகனேரி கிராம மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்றது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் எடுத்துக் கொண்ட துரித முயற்சி காரணமாக இவ் உதவி வழங்கப்பட்டது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட வாகனேரி கிராமத்தில் கடந்த 15 ஆம் திகதி ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக சுமார் முப்பது வீடுகள் சேதமடைந்ததுடன் அப் பகுதியிலுள்ள மரங்களும் முறிந்து விழுந்தன.

இவ் உதவி வழங்கும் நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், பிரதேச சபை உறுப்பினர்களான வை.யோகஸ்வரன், ரீ.கிருபை ராசா மற்றும் றமீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த கிராம மக்களின் நலன் கருதி இவ் உதவியை வழங்கிய கட்டார் நாட்டில் தொழில் புரியும் சமூக சேவகர் றமீஸ் என்பவருக்கு தவிசாளர் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :