டெவோன் நீர் வீழ்ச்சியில் விழுந்த யுவதியை தேடும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

க.கிஷாந்தன்-


டெவோன் நீர் வீழ்ச்சியில் விழுந்து காணாமற் போயுள்ள 19 வயது யுவதியை தேடும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திம்புளை – பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பத்தனை டெவோன் நீர் வீழ்ச்சியை தனது மூன்று நண்பிகளுடன் பார்வையிட சென்ற போது நேற்று (18) மாலை குறித்த யுவதி நீர் வீழ்ச்சியின் உச்சியில் இருந்து கால் தடுமாறி விழுந்து காணாமல் போனார்.

இந்த நிலையில் இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் மீட்பு பணிகள் இன்று (19) காலை முதல் இடம்பெற்று வந்த நிலையில் மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக திம்புளை – பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு நீர் வீழ்ச்சியிலிருந்து கீழே விழுந்து காணாமல் போயுள்ள யுவதி லிந்துலை லென்தோமஸ் பகுதியில் வசித்த 19 வயதான மணி பவித்ரா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர் வீழ்ச்சியின் அடி பகுதியில் பாரிய கற்பாறைகள் உள்ளதாலும், நீர் வீழ்ச்சியில் அதிகளவில் நீர் விழுவதனை கருத்தில் கொண்டு மேற்படி யுவதியை தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :