படைப்பாளிகளுக்கு அமைப்பாளராகும் அரிய வாய்ப்பு; புதிய அலை கலை வட்டம் அமைப்பாளர்களை நியமிக்கிறது



லை, இலக்கியம், ஊடகம் மற்றும் சமூகப் பணித்துறைகளில் தொடர்ச்சியாக செயற்பட்டு பல்வேறு சாதனைகளைப் பதிவு செய்து வரும் “புதிய அலை கலை வட்டம்” தனது நிர்வாகக் கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய அமைப்பாளர்களை நியமிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களை மையப்படுத்தி அமைப்பாளர்களை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. கலை, இலக்கியம், ஊடகம் மற்றும் சமூக நலப்பணிகளில் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட விரும்பும் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகள் இவ்வாய்ப்பின் மூலம் அமைப்பின் செயற்பாடுகளுடன் இணைந்து பணியாற்ற முடியும்.

புதிய அலை கலை வட்டம் பல்வேறு கலை மற்றும் இலக்கிய நிகழ்வுகள், கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன், சமூகத்தில் திறமையான படைப்பாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு மேடைகளை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.

அமைப்பின் எதிர்கால செயற்திட்டங்களை விரிவுபடுத்துவதற்கும், மாவட்ட மற்றும் பிராந்திய ரீதியான செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்கும் இந்த அமைப்பாளர் நியமனத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாய்ப்பில் இணைந்து கொள்ள விரும்புவோர் மற்றும் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் 075 4880172 என்ற வாட்ஸ்அப் இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு புதிய அலை கலை வட்டம் அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :