இந்த செயலமர்வு தென்கிழக்குப் பல்கலைக்கழக (South Eastern University of Sri Lanka) கேட்போர் கூடத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் பல்வேறு துறைகளில் இயங்கி வரும் தொழில்முனைவோர்கள், புதிய தொழில் தொடங்க விரும்புவோர் மற்றும் தங்களது வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்ற விரும்பும் அனைவருக்கும் இச்செயலமர்வு பயனுள்ளதாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செயலமர்வில் வணிக அபிவிருத்தி, தொழில் விரிவாக்க உத்திகள், சந்தைப்படுத்தல், தொழில்முனைவு வாய்ப்புகள் மற்றும் நடைமுறை அனுபவங்கள் தொடர்பான பல்வேறு அமர்வுகள் இடம்பெறவுள்ளன.
ஏற்பாட்டாளர்களின் அறிவிப்பின்படி, இருக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளதால், முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். எனவே, பங்கேற்க விரும்புவோர் தங்களது இடத்தை உறுதிப்படுத்துவதற்காக உடனடியாக பதிவுசெய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
பதிவு செய்ய விரும்புவோர் பின்வரும் இணைப்பின் மூலம் முன்பதிவு செய்யலாம்:
https://forms.gle/LT5HsEqLZ4rMfVs2A

0 comments :
Post a Comment