புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீன் அவர்களின் 117 ஆம் ஆண்டு பிறந்த நாள் நினைவு..

அஷ்ரப் ஏ சமத்-

புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீன் அவர்களின் 117 ஆம் ஆண்டு பிறந்த நாள் நினைவும் காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் முப்பெரும் நூல் வெளியீடும் நேற்று 04.05.2026 திங்கட் கிழமை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் அமரர் எஸ்.ரி.சிவநாயகம் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தமிழ் சங்கத்தின் தலைவி சட்டத்தரணி திருமதி சுகந்தி இராஜகுலேந்திரா தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அதிதி தொழிலதிபர் முனைவர் யூசுப் கே. மரிக்கார் வாழ்த்துக்களை தமிழ் மாமணி சாகித்திய ரத்னா அல் அஸூமத், தினகரன் ஆசிரியர் செந்தில் வேலவர்
நூலறிமுகம் - அகர முதல ஜின்னாவின் குறள்கள் 1000 எழுத்தாளர் திருமதி வஸந்தி தயாபரன் இயேசு என்னும் ஈஸா நபி காவியம் சட்டத்தரணி ரஷீட் எம் .இம்தியாஸ், இமைத்துறக்கம் எழில்மிகு துபை சட்டத்தரணி மர்ஸம் மௌலானா அகரமுதல் நூல் விமர்சனம் காரைக்கவி கந்தையா பத்மநாதன்
நூலின் முதல் பிரதியை முனைவர் யூசுப் மரைக்காருக்கு நூலசிரியரின் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுகளை ஆசிரியை சுபாஷினி பிரணவன் தொகுத்து வழங்கினார்
இந் நிகழ்வில் ஜின்னாவின் குடும்ப உறுப்பினர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் கொழும்பு தமிழ்ச் சங்க அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்
அனைவருக்கும் நூலாசிரியர் நூல்களை வழங்கி வைத்தார்.
அத்துடன் கவிஞர்கள் அக்பர் அலி, எம்.எஸ்.எம். ஜின்னாஹ், காப்பியக்கோ வினை பொன்னாடை போற்றி கௌரவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :