இந்நிகழ்வில் புரவலர் புத்தகப் பூங்காவின் ஸ்தாபகர் புரவலர் ஹாஷிம் உமர், பிரபல தொழிலதிபர் சுலைமான், தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே. செந்தில் வேலவர், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம். சுஹைர், சுயாதீன தொலைக்காட்சி தமிழ் செய்திப் பிரிவு முன்னாள் முகாமையாளர் சித்தீக் ஹனீபா, தமிழன் பத்திரிகையின் இணை ஆசிரியர் ஏ.எம். ஜவ்பர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சமூக முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
நோன்பு துறப்புத் தருணத்தில் கலந்து கொண்ட அனைவரும் ஒன்றிணைந்து துஆ பிரார்த்தனைகளில் ஈடுபட்டதுடன், நாட்டின் அமைதி, ஒற்றுமை மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்விழாவில் சமூக நல்லிணக்கம், இன ஒற்றுமை மற்றும் மத சகிப்புத்தன்மை ஆகியவற்றின் அவசியம் குறித்து கருத்துகள் பகிரப்பட்டன.
சங்ரிலா ஹோட்டல் நிர்வாகத்தினர் உரையாற்றுகையில், இவ்வாறான இஃப்தார் நிகழ்வுகள் சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் ஒரே மேடையில் ஒன்றிணைக்க உதவுவதுடன், பரஸ்பர புரிதல் மற்றும் நட்புறவை மேம்படுத்தும் வகையில் அமைகின்றன என தெரிவித்தனர். எதிர்காலத்திலும் இத்தகைய சமூக ஒருங்கிணைப்பு நிகழ்வுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
இந்நிகழ்வு நட்பு, நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர மரியாதையை வலுப்படுத்தும் ஒரு முக்கிய சமூக சந்திப்பாக அமைந்ததுடன், பங்கேற்ற அனைவரின் பாராட்டையும் பெற்றது.







0 comments :
Post a Comment