அவர் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில்,
“தைப்பொங்கல் என்பது ஒரு விழாவைத் தாண்டிய அரசியல் மற்றும் சமூக பிரகடனம். அது உழைப்புக்கான மரியாதை, இயற்கைக்கான நன்றி, ஒடுக்குமுறைகளை எதிர்த்து நிற்கும் மக்களின் உறுதி, எதிர்காலத்தை நோக்கிய நம்பிக்கையின் வெளிப்பாடு” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பல தசாப்தங்களாக போர், புறக்கணிப்பு மற்றும் பின்தங்கிய நிலை காரணமாக பாதிக்கப்பட்ட வடக்கு மக்களின் வாழ்வில், நிலையான முன்னேற்றம், பொருளாதார சுயநிலைத்தன்மை மற்றும் சமூக நீதி உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்பதே அரசின் தெளிவான நிலைப்பாடு என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் ஓர் அங்கமாக, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவர் சமூகத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நவீன மீன்பிடி தொழில்நுட்ப வசதிகள், மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் தரையிறக்க மையங்களின் அபிவிருத்தி, குளிரூட்டல் மற்றும் சேமிப்பு வசதிகள், மீன்வளப் பயிற்சி மையங்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான தொழில்வாய்ப்பு உருவாக்கத் திட்டங்கள் ஆகியவை திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“வடக்கு மக்களின் பொருளாதார மீட்பு வெறும் உதவித் திட்டங்களால் அல்ல; உரிமைகளுடன் கூடிய வளர்ச்சியால் மட்டுமே சாத்தியம்” என வலியுறுத்திய அமைச்சர், மீனவர்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் மரியாதை எப்போதும் அரசின் முதன்மை முன்னுரிமையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்த தைப்பொங்கல், புறக்கணிப்பின் காலத்தை முடிவுக்கு கொண்டு வந்து, வடக்கு மக்களின் வாழ்வில் புதிய விடியல் மலரச் செய்யும் திருப்புமுனையாக அமைய வேண்டும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஒற்றுமை, உழைப்பு மற்றும் சமூக நீதி ஆகியவை நாட்டின் உண்மையான வளர்ச்சிக்கான அடித்தளமாக மாற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“இந்த பொங்கல், உங்கள் இல்லங்களில் வளமும் நம்பிக்கையும் மட்டுமல்ல; உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படும் ஒரு நியாயமான எதிர்காலத்தையும் கொண்டு வரட்டும்” என அவர் தனது வாழ்த்துச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.
அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.
க. கிஷாந்தன்
ஊடக செயலாளர்
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்
.jpg)
0 comments :
Post a Comment