கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டு, நிறைவடையாத நிலையில் காணப்படுகின்ற OPD மற்றும் ETU பகுதிகளைக் கொண்ட கட்டடத்தின் மிகுதி வேலைகளை பூர்த்தி செய்வது சம்பந்தமான கலந்துரையாடலொன்று கடந்த திங்கட்கிழமை (12) சுகாதார அமைச்சில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவரும், இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களுக்கும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களுக்கும் இடையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
2025 ஆம் ஆண்டு இக் கட்டட மிகுதி வேலையின் மதிப்பீடு மத்திய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைய, சுமார் 1120 மில்லியன் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் பெப்ரவரி அளவில் இக்கட்டட வேலையின் நிர்மாண, நிபுணர் குழு சுகாதார அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய விஜயம் செய்யவுள்ளனர்.

0 comments :
Post a Comment