திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலகப் பங்கேற்புடன் மேலும் 15 நிரந்தர வீடுகள் மக்கள் சேவை மன்றத்தினால் வழங்கி வைப்பு



ஹஸ்பர் ஏ.எச்-
திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் வாழ்வதற்கான தங்குமிட வசதிகள் மேம்படுத்திக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தம்பலகாமம் பிரதேசத்தில் மேலும் 15 நிரந்தர வீடுகள் கையளிக்கும் நிகழ்வு மன்றத்தின் தலைவர் எம். ரீ. எம். பாரிஸ் தலைமைளில் இடம்பெற்றது.

யுத்தம் மற்றும் பொருளாதார கஸ்ட நிலமைகளில் நிரந்தர மற்றும் பாதுகாப்பு வீடுகள் இல்லாது பல கஸ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்து வந்த 40 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் நேற்றைய (27) தினம் தம்பலகமம் பிரதேச செயலகத்தின் பங்கேட்புடன் பயனாளிகளுக்கு வீடுகள் கையளிக்கப்பட்டது.

சிலி நாட்டைத் தலைமையமாகக் கொண்டு இயங்கி வரும் சர்வதேச தொண்டு நிறுனமான செலவிப் பவுன்டேசன் நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் மேற்படி நிரந்தர வீடுகள் நிர்மாணித்து வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தம்பலகமம் பிரதேச செயலளார் திருமதி. ஜெ. ஸ்ரீபதி அவர்கள் பிரதம அதிதியாகவும், தம்பலகமம் உதவிப் பிரதேச செயலாளர் இரா. பிரசாந்தன் அவர்களும், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், மக்கள் சேவை மன்ற உத்தியோகத்தர்கள், சமூகமட்ட நிறுவனப் பிரதிநிதிகள், சமயத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :