சமுத்திரத்தில் சிறப்பாக நடைபெற்ற மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய தீர்த்தோற்சவம்



வி.ரி.சகாதேவராஜா-
ரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ திருவிழாவின் இறுதி நாள் தீர்த்தோற்சவம் நேற்று முன்தினம் (12) திங்கட்கிழமை சித்ரா பௌர்ணமியன்று சிறப்பாக நடைபெற்றது.
ஆலய வருடாந்த அலங்கார உற்சவ திருவிழா ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் ஆலய குரு சிவஸ்ரீ சபா கோவர்த்தன சர்மாவின் ஒத்துழைப்புடன் சிறப்பான முறையில் இடம்பெற்று நிறைவடைந்தது.
ஆலயத்தின் தலைவர் கி.ஜெயசிறில் ஆலய ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கும்பங்கள் தாங்க மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து கடற்கரையை அடைந்து தீர்த்தம் இடம்பெற்றது.










எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :