இவ்வாண்டுக்கான ஹஜ் பயணத்தை மேற்கொள்ளவுள்ள ஹாஜிகளுக்கான வழிகாட்டல் ஆலோசனைகளை சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரியபள்ளிவாசலின் பேஷ் இமாம் அல்ஹாஜ் மௌலவி. எம். ஐ. ஆதம்பாவா (ரசாதி), அல் ஹாஜ் மௌலவி. சபா முகம்மட் (நஜாஹி) உள்ளிட்ட பலர் வழங்கினர்.
வைர விழா கண்ட சாய்ந்தமருது முல்தஸம் ஹஜ் ட்ரவல்ஸ் நிறுவனமானது, இம்முறையும் கலாச்சார அமைச்சு மற்றும் சவுதி அரேபிய தூதரகத்தின் உபசரணையுடன் பயணிக்கும் கிழக்கு இலங்கையின் முதலாவது ஹஜ் முகவர் நிறுவனமாக அமையப்பெற்றுள்ளது.
இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் மார்க்க, கல்விப்பணியாற்றிய மர்ஹூம் அல் ஹாஜ், மௌலவி. ஏ.எஸ்.எம். சம்சுத்தீன் (பஹ்ஜி,மதனி) SLEAS- I ஓய்வு பெற்ற பிரதம கல்விப்பணிப்பாளர் அவர்களால் 1966ம் ஆண்டு (ஹிஜ்ரி -1385) நிறுவப்பட்டு, இன்று ஆறு தசாப்த அனுபவத்துடன் சிறப்பாக வழி நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிறுவனமானது, இலங்கை கலாச்சார அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் முதலாம் தர ஹஜ் முகவர் நிறுவனமாக தெரிவு செய்யப்பட்டு அதிகப்படியான ஹாஜிகளை அழைத்துச் செல்லும் வாய்ப்பையும் பெற்றுள்ளது.
தனது நிறுவன வரலாற்றில் இதுவரை பல ஆயிரம் ஹாஜிகளை ஹஜ்ஜுக்கு அழைத்துச்சென்ற அனுபவத்தைப் பெற்றுள்ள சாய்ந்தமருது முல்தஸம் ஹஜ் ட்ரவல்ஸ் நிறுவனம் இம்முறையும் 46 ஹாஜிகளை ஹஜ்ஜிக்கு அழைத்துச்செல்லவுள்ளதாகவும் இம்முறையும் இலங்கையிலிருந்து புறப்படும் முதல் குழுவாக தங்களது குழுவினரே தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான அல் ஹாஜ், எம்.எஸ்.எப்.ஆர். முக்கதஸி தெரிவித்தார்.
இம்முறை, 32 தினங்களாக அமையப் பெறவுள்ள ஹஜ் பயணக் காலத்தில், மக்கா, மதினா ஆகிய நகரங்களில் அதி சொகுசு நட்சத்திர விடுதிகளில் தங்குமிட வசதிகளுடன், (மக்கா புல்மன் ஸம்ஸம் 5 நட்சத்திர ஹோட்டலில் 12 தினங்கள்), இலங்கை முறைப்படி உணவுகள் மற்றும் அதி சொகுசு போக்குவரத்து வசதிகளையும் நியாய கட்டணத்துடன் ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின்போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. ஏ. ஆதம்பாவா உள்ளிட்ட பிரமுகர்கள், கடந்த காலங்களில் ஹஜ்ஜுக்கு சென்றவர்களில் ஒருகுழுவினர் மற்றும் இம்முறை ஹஜ்ஜுக்கு செல்லவுள்ளவர்கள் என பலரும் பங்குகொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment