இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் கலந்துகொண்டு உரையாற்றியதுடன் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.
கற்கை நெறியின் இணைப்பாளர் சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.எச். நபாரின் வழிகாட்டலில் இடம்பெற்ற இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளர் கயன் பொதுப்பிடிய கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டார்.
விஷேட அதிதிகளாக முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா, பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.ஏ.எல்.ஏ. ஹலிம், இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் பீடாதிபதி அஷ் செய்க் எம்.எச்.ஏ. முனாஸ், கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் மற்றும் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் ஆகியோர் கலந்துகொண்டதுடன் முன்னிலை அதிதிகளாக தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி அலுவலர் தேசகீர்த்தி தங்கராஜ் கல்யாணி மற்றும் வளவாலர்கலான ஜெ. ஏ. சனத் ஜயசிங்க, சரோஜா தேவநாயகம், எம். யசோதர்னி ,ஜெ. கல்பணி மற்றும் எஸ்.எம். ஜுவல்லரியின் உரிமையாளர் எஸ்.எம். றிப்fனாஸ், எஸ்.எம்.எம். அப்fசார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
"அரசகரும மொழிக்கொள்கை ஊடாக இலங்கை பிரஜைகளுக்கு மகிழ்ச்சிகரமான சேவை " எனும் தொனிப்பொருளின் கீழ் பல்கலைக்கழக ஊழியர்கள் தங்களது கடமைகளை இலகுவில் ஆற்றும் பொருட்டு தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து இவ்வாறான கற்கை நெறிகளை நடாத்தியது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment