நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் SLMC சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை ஆதரித்து நமது பேரியக்கத்தை வாக்குகளால் வளம் காணச் செய்து 08 வட்டாரங்களையும் வென்று 08 ஆசனங்கள் பெற்று சரித்திரம் படைக்கத் துணை நின்றவர்களை “உரம் போட்ட கரங்களுக்கு தரம் கொண்ட நன்றி” எனும் தொணிப்பொருளில் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை ஜம்மிய்யத்துல் உலமா சபையின் செயலாளர் N.T.நசீர் (ISA) அவர்களின் விஷேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது
இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி S.M.A.கபூர், கட்சியின் மாவட்ட செயலாளர் A.C.சமால்தீன், முன்னாள் தவிசாளர் A.B.M.A.காதர், தொழிலதிபர் A.K.அமீர், பிரதேச சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற கௌரவ உறுப்பினர்களான A.L.அமானுல்லாஹ், M.L.றினாஸ், A.C.நியாஸ், I.L.அஸ்வர் சாலிஹ், றியா மசூர், A.L.பாயிஸ், A.S.M.உவைஸ், S.M.றியாஸ், பாலமுனை பிரதேச அமைப்பாளர் A.L.M.அலியார், மத்திய குழு செயலாளர் A.R.றினோஸ், அட்டாளைச்சேனை ஜம்மிய்யத்துல் உலமா சபையின் தலைவர் U.M.நியாஸி மௌலவி, பட்டியல் வேட்பாளர்களான A.L.நயீம், I.M.சபீர், A.A.M.பமீல், கட்சியின் கிளைக்குழுக்களின் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், இளைஞர் அமைப்பாளர்கள், உலமாக்கள், கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள், கட்சியின் போராளிகள், பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment